என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கவுன்ட் டவுன் தொடங்கியது
நீங்கள் தேடியது "கவுன்ட் டவுன் தொடங்கியது"
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெளிநாட்டுக்கு சொந்தமான இரு செயற்கை கோள்களை நாளை இரவு விண்ணில் ஏவுவதற்கான இஸ்ரோ நிறுவனத்தின் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. #Countdown #ISRO #Countdown #PSLVC42
சென்னை:
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ உள்நாட்டு ஆராய்ச்சி தேவைகளுக்கான செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதுடன், வெளிநாடுகள் சார்பில் அனுப்பப்படும் செயற்கை கோள்களையும் விண்வெளியில் நிலைநாட்டும் பணிகளை செய்து வருகிறது.
பி.எஸ்.எல்.வி. எனப்படும் ராக்கெட்கள் மூலம் இதுவரை 44 செயற்கை கோள்களை இஸ்ரோ செலுத்தியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை இரண்டு செயற்கை கோள்களை செலுத்திய இஸ்ரோ, பிரிட்டன் நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு செயற்கை கோள்களை நாளை (16-ம் தேதி) இரவு 10.07 மணியளவில் சென்னையில் இருந்து சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.
வனப்பகுதி மதிப்பீட்டு ஆய்வு மற்றும் வெள்ளம், பேரழிவு கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள நோவாஎஸ்ஏஆர் மற்றும் எஸ்1-4 ஆகிய இந்த இரு செயற்கை கோள்களும் சுமார் 800 கிலோ எடை கொண்டது.
சூரியனின் வெளிவட்டப் பாதையில் பூமியில் இருந்து 583 கிலோமீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த செயற்கை கோள்களை விண்ணில் ஏவுவதற்கான 33 மணிநேர கவுன்ட் டவுன் இன்று பிற்பகல் 1.10 மணிக்கு தொடங்கியது. #Countdown #ISRO #Countdown #PSLVC42
ஒடிசா மாநிலத்தில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான 90 நாள் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. #HockeyWorldCup #NaveenPatnaik
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான 90 நாள் கவுன்ட் டவுன் இன்று தொடங்கியது. புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கவுன்ட் டவுன் கடிகாரத்தை முதல்வர் நவீன் பட்நாயக் இயக்கி வைத்தார்.
மேலும், போட்டியை விளம்பரப்படுத்தி மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில், ‘ஹாக்கிக்கு என் இதயம் துடிக்கிறது’ என்ற பிரச்சாரத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார். விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கு விருது மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நவீன் பட்நாயக், நாட்டிற்கு பெருமை தேடித் தந்த மிகச்சிறந்த ஹாக்கி வீரர்களை ஒடிசா மாநிலம் உருவாக்கியிருப்பதாகவும், இந்த உலகக்கோப்பை போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். #HockeyWorldCup #NaveenPatnaik
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X